பூ சூட்ட முடியா வெள்ளி நிலா

முழுமையாக ஒருநாளும் வளர விட்டதில்லை
என் தாய் வீட்டின் மல்லிகை மொட்டுகளை!!!

அலங்கரித்த அலுத்து போவேன்
அனுதினமும் மனப் பெண் கோலத்தில்!!!

என் அங்கத்தில் கரை அடைந்தாலும் அனுமதிப்பேன் அழகிய
முந்தானையில் அரைப்புள்ளி அளவிலும் அழுக்கு படிய விட்டதில்லை!!!

உடுத்தும் புடைவைக்கு ஒரு நாளும்
மாறான வண்ண வளையல்களை அணிந்ததில்லை!!!


இருப்பினும் இன்றோ!!!

வீட்டை சுற்றி நிற்கும்
பூக்கள் அடர் வனமாக மாறிய பின்னும்
கிள்ளி எடுத்து சுட முடியாமல்
தயங்கி நிற்கிறேன் தளர்ந்து போன கைம்பெண்ணாக!!!

எழுதியவர் : அனுஷா தேவி... (20-Oct-16, 3:58 pm)
பார்வை : 127

மேலே