மழலை இன்பம்

தவழும் மழலையைத் தாயவள் கண்டால்
கவலை பறந்திடும் காற்றிலே! தேனாய்
உவகைப் பெருகிட உள்ளமும் சொக்கிப்
பவனி வருபவள் பார் .

விழிகள் விரிந்திட விந்தையாய்ப் பார்க்கும்
மொழிக லறிந்திடா மொட்டெனப் பூக்கும்
அழகாய்த் தவழ்கையில் அம்புலி தோற்கும்
மழலை நலமுற வாழ்த்து .

( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா )
புளிமா கருவிளம் கூவிளம் தேமா

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Oct-16, 2:25 pm)
Tanglish : mazhalai inbam
பார்வை : 93

மேலே