உன் முகவரி வாசலில்

மனத்தோட்டத்தில் நான் நடக்கிறேன்
-----------மலர்களாக உன் நினைவுகள்
மார்கழிப் பனியில் நான் நனைகிறேன்
----------மௌனமாக உன் நினைவுகள்
கற்பனை வானில் நான் மிதக்கிறேன்
-----------கவின் நிலவாக உன் நினைவுகள்
கவிதை வீதியில் நான் நடக்கிறேன்
-----------உன் முகவரி வாசலில் என் நினைவுகளுடன் நீ !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-16, 7:28 pm)
பார்வை : 350

மேலே