ஞானம் - புடம் போடப்பட்ட தங்கம்

தோற்றவர்களின்
தெளிந்த
ஞானம்

தெரியவேண்டியவர்களுக்கு
தெரியாமல்
போவதேன்!

நல்லவர்களின்
நாசூக்கான
சமிக்க்ஷைகள்

அப்பாவிகளின்
எதார்த்த மனதினுள்
எட்டுவதேயில்லை...!

தூண்டில்
புழுக்களின்
எச்சரிக்கை

மீன்களின்
காதுகளுக்கு
எப்பொழுதும்
கேட்பதேயில்லை!

எழுதியவர் : செல்வமணி (3-Nov-16, 10:05 pm)
பார்வை : 139

மேலே