அவன்

எதிர்பாரா இடத்தினில்
இன்றவனை மீண்டும்
சந்திப்பேனென
எதிர்பார்த்திராபடிக்கு
அத்தேநீர் விடுதியில்
அச்சந்திப்பு நிகழ்ந்தது.
அவனென் கல்லூரித்
தோழன்.ஐந்தாண்டுகளுக்
கு முன்னம் விடைப்பெற்ற
நட்பை இப்படி
தெய்வாதீனமாக
கண்டதில் பெருமகிழ்ச்சி
பீறிட கூடவே
இன்றைய என்
தோற்றம் அவனால்
இனங்காணப்படுமா?
என்பன போன்ற
வினாக்களை
வேரறுத்து அவனே
அழைத்துப் பேசியது
அயிர்க்கும்படிதான்
இருந்தது!
இனிய பண்ணொன்று
இதயம் நுழைந்து
திக்குத் தெரியா ஆற்றில்
மனம்
ஆட்டுவித்த லயத்தில்
அச்சந்திப்பு
சுகந்தமாயிருந்தது.
அவன் பேசினான்.
ஆனால்,அது நான்
எதிர்பார்த்தபடிக்கு
முகமன் உசாவல்களைத்
தாண்டி
தொழில்,குடும்பமென
பயணிக்கும் வழமையான
உபசரிப்பாய் இல்லை.
அவன் பேசினான்.
மனம் திறந்து பேசினான்.
ஐந்தாண்டுகளுக்கு
முன்னம் கால நதியில்
களவு போய்விட்ட
சௌந்தர்ய சொப்பனங்களை
முற்றும் மீளியக்குமோர்
வெறியில் சிதறின அவன்
சொற்கள்!
நீர் நடைப்பயிலுமந்த
நறுங்குளிர் தடாகம்
பட்சியினம் சுரம் பழகும்
மரங்கள்
வெட்டிப் பேச்சில்
முங்கியெழும்
குட்டிச்சுவரென
அத்தேவ கணங்கள்
களவுப்போன களங்களில்
மோதி எதிரொலித்து
ஊதுவத்தி கட்டின்
நறுமணமாய்
பரவிக் கொண்டிருந்தது
அவன் சொற்கள்.
அவன் பேசினான்.
"நினைவிருக்கிறதா?
முதல் நாள் வரவேற்பில்
வழுக்கிவிட்ட அத்தரை
விரிப்பை?
ஆயினும்,
அகவையன்று
வழுக்கவில்லையே!
நினைவிருக்கிறதா?
வலுவற்றவனின்
மற்போராய்
தேர்வுகளோடு நிகழ்ந்த
அம்மூன்றாம் பருவப்
போரை?
அதன் சத்திய
சாட்சிகளான
அப்புல்வெளிகளின்று
மரித்துவிட்டன!
வாழ்க்கை அதனோடு
மரித்துவிடவில்லையே!
அனுதின சந்திப்பின்
அரச மரமும்,சிற்றுண்டி
பகிர்வில் சிறுகுள
கட்டையும் அப்படியே
நிலைப்பெற்று
சமைந்துவிட
நம்மூடான அத்தெய்வீக
கணங்கள் மட்டும் எங்கு
தொலைந்தன?
நான் பேசவில்லை.
தெய்வ அருளை
திடுமென பெற்றவொரு
பக்தனைப் போன்றோ,
தீராக்காதலில்
நோக்குமொரு காதலி
போன்றோ அவன்
விவரிப்பில்
என் நிமிடங்கள்
சமைந்து நின்றுவிட்டன!
உண்மையில் அவன் என்
அந்நாட்களின் நெருங்கிய
சிநேகிதனுமல்ல!
இருப்பினும் அவன்
குறித்தான விடயங்கள்
தெரியும்.
அவன் பெரிய கவியல்ல...
ஆயினும், எப்போதேனும்
ஏதேனும் கிறுக்குவான்!
அவன் பெரிய
அறிவாளியல்ல...
எனினும்,
சமயோசித
பிரயோகிப்பில் வருமிடர்
தவிர்க்குவான்!
அவன் யாரையோ
காதலித்ததும்
யாராலும்
காதலிக்கப்பட்டதும்
இல்லை!
உண்மையில்
காதலின் தகுதியேதும்
அவன்வசமில்லை!
விலைக்கூடிய
சப்பாத்து...
விலைக்கூடிய
பேண்ட்,ஷர்ட்...
விலைக்கூடிய
கைப்பேசி...
விலைக்கூடிய
கைக்கடிகாரம்...
விலைக்கூடிய
ஈருளை,நான்குருளை
வண்டி...
விலை மதிப்பற்ற
காதலை மதிப்பற்றதாக்க
இப்படி எத்தனையோ
மதிப்பீடுகளில்லையா!
அதிலெதிலும் அவன்
தேறவில்லை!
உடல் மறைக்கும்
உபகரணமென
உடைக்கொள்ளும்
அன்றைய அவனிடம்
காதலின் தகுதிகளைப்
பொருத்திப் பார்த்தலும்
நகைப்பே!
பின்பு எங்கிருந்து
முகிழ்த்தது?
அவ்வழகிய நிமிடங்களை
அணுவணுவாய்
செதுக்கும்
வேகமும்,வெறியும்!
எங்கிருந்து பிறந்தது?
கல்லூரி
சுவர்,சாலை,மலரென
அற்பமானதையும்
அற்புதமாய் நோக்கும்
இவ்விசித்திர பார்வை
இவனுள்!
தெரியவில்லை.
கூடவே இவனளவுக்கு
அத்தேன்துளி
நிமிடங்களை இவன்
கோணத்தில் நான்
பருகவில்லையா?
அல்லது அவற்றை
உலைத்து உயிர்க்கொள்ள
செய்யுமொரு தத்துவ
பார்வை இவனைப்
போன்று
என்னிடமில்லையா?
இவனினும் உயரிய
தகுதியுடைத்த என்னுள்
காணாத தத்துவ தரிசனம்
நான் காணா நிலையில்
இவனுளம் துளைத்ததா?
என்னுள் கிளறும் யுக
கணைகளுக்கு
பதிலில்லை!
அச்சடித்த பதுமைப்
போன்றோ உயிர்க்கலை
ததும்புமொரு சிற்பம்
போன்றோ ஒரு சாய்ந்த
வெறிப்பில் இன்னுமவன்
விழிகள் உரையாடிக்
கொண்டிருந்தன.
அவன் பேசினான்.
"அந்த டிசம்பர் மாத
முற்பகலில் முதலாளாய்
கல்லூரி நுழைந்து
அவ்வேம்படியில்
நிற்கையில் இரவெல்லாம்
சேர்த்து வைத்த
இலையோடான ஊடல்கள்
பனியாய், மழையாய் என்
தலை கசிந்து உயிர்
நனைக்கும்...
என் நாட்கள்
அன்றுடன்
நனைந்துவிடவில்லையே!'
'நதிமடி தவழ்ந்தெழும்
அச்சங்கீத பூந்தென்றல் என்
தேகம் மட்டும் சரசமாய்
வருடிச் செல்லும் என்
ஆயுள் அன்றோடு
முடிந்துவிடவில்லையே!'
'வாகனக் கொட்டகைக்
கடக்கையில் கவிப்பாடும்
காவிரி இளமை
சுரங்களை என் செவியில்
மீட்டிச் செல்லும் என்
நாட்கள் அதனூடே
வறண்டுவிடவில்லையே!'
'ஆகாய மொழிப் பேசும்
அழகிய பட்சியினம்
ஆலோசனை
கலையும்படி
அம்மணிக்கூண்டில்
அலையெழும்பும்...
என் நாடி
அந்நாதத்தினூடே
மறைந்துவிடவில்லையே!'
'தேவதைகள் படியேற
நின்றுப் போகும்
பேருந்ததும்
அற்பனெனக்குமோர்
அடிப்படியில்
இடங்கொடுக்கும்
என் சுவாசமன்றோடு
முடிந்துவிடவில்லையே!'
'சாகத்தான்
வாழ்க்கையெனும் சத்திய
வாக்கெனக்கு அச்சங்கீத
நிமிடங்களில்
சம்பவிக்கவில்லையே!' "
என்னுள் சலிப்பு
மேலிட்டது.
"என்ன நீ பைத்தியம் போல
பிதற்றுகிறாயே?!
மீட்டிய சுரமொன்று
மீண்டும் கைப்புகுமா?
தொலைந்த நொடி
மீளியக்கில் கலைந்த கணம்
கைவருமா?
நீயொரு பைத்தியம்"
என்றேன் எரிச்சலாய்.
அவன் சிரித்தான்.
" 'ஆம் பைத்தியந்தான்...!
உணவோ உயிரோ
கைவிட்டும்
அப்பசுஞ்சோலை மீண்டும்
சேரத்துடிக்குமொரு
பைத்தியம்!'
'நினைவுகளின்
எரித்தழலில் நிகழ்
நொடிகளை எரிக்க
துடிக்குமொரு
பைத்தியம்!'
'வாலிபத்தின்
ஸ்பரிசங்களோடு
வறண்டுவிட்டவொரு
பைத்தியம்!' "
"இந்த பைத்தியத்தியத்தின்
பிதற்றல்கள்
என்னைப் போன்றே
உணர்வலையில் சோரம்
போன
பைத்தியங்களுக்கன்றி
உம்போன்ற
மேதாவிகளுக்கு
துரும்பும் புரியாது!"
"ஏனெனில், நான் உன்னை
சார்ந்தவனல்ல...
என் காலம் என்றோ
முடிந்துவிட்டது!
என் சுவாசம் என்றோ
அடங்கிவிட்டது!
வாசமலர்கள் வருடிப்
போகும் அவ்வாலிப
சாலையிலென்றோ என்
ஜீவன் மரித்துவிட்டது!"
"இதோ! அசைந்தும்,
பேசியும்,நகர்ந்தும்
நீ பார்ப்பது வெறும்
நடைப்பிணமே!
உடல்,பொருள்,ஆவியனைத்
தும் கையளித்தேனும்
அஜ்ஜீவவனமடைந்து
மரித்துப் போன என் தேகம்
சிதையேற்றுமொரு
பேராசைதான் சித்தம்
முழுதாய்
வியாபித்துள்ளது!"
"அதன் பிறகு, இதோ!
நீ காண்கிறாயே
இச்சூதக உடலும்
துளிச்சாம்பலே!
ஆம்,உணர்வலையில்
களவுப் போகா உயர்
மாக்கள் உம் பார்வையில்
எம் போன்றோர்
உணர்வும்,பேச்சும்
யாவும்
பைத்தியக்காரத்தனமே!"
"இதோ! அசைந்தும்,
பேசியும்,நகர்ந்தும்
நீ பார்ப்பது வெறும்
நடைப்பிணமே!
உடல்,பொருள்,ஆவியனைத்
தும் கையளித்தேனும்
அஜ்ஜீவவனமடைந்து
மரித்துப் போன என் தேகம்
சிதையேற்றுமொரு
பேராசைதான் சித்தம்
முழுதாய்
வியாபித்துள்ளது!"
"அதன் பிறகு, இதோ!
நீ காண்கிறாயே
இச்சூதக உடலும்
துளிச்சாம்பலே!
ஆம்,உணர்வலையில்
களவுப் போகா உயர்
மாக்கள் உம் பார்வையில்
எம் போன்றோர்
உணர்வும்,பேச்சும்
யாவும்
பைத்தியக்காரத்தனமே!"
"யுகத்தொலைவு
யாகத்திலேனும்
உங்களால் எங்களை
சுவீகரிக்க முடியாது!
ஆம்,நானொரு
பைத்தியம்......!"
அவன்
பேசிக்கொண்டிருக்கும்
போதே கடிகாரம்
பார்த்தபடி பேதமை
புலம்பல் புரியா
கதியோ,இனம்
புரியாவொரு
பொறாமைப் பிடியோ
கரங்கூப்பி
விடைப்பெற்று
வந்துவிட்டேன்!
"இறந்தகாலம் இனிப்பதேன்?
நிகழ்காலம்
இனிக்காததால்!"
என்றோ,எங்கோ
கேட்டவொரு வாசகம் என்
இன்றின் நிமிடங்களை
இம்சிக்கிறது!
அவன் யாரென்ற ஓர்
வினாவை
தயைக்கூர்ந்தெழுப்பாத
ீர்கள்!
உறுதியாய் என்வசம்
விடையில்லை!!!
**********************