பல விகற்ப பஃறொடை வெண்பா வாராத கோடிகளால் வங்கிகள்த வித்திருக்க

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
வாராத கோடிகளால் வங்கிகள்த வித்திருக்க
ஆறா ரணங்களால் அங்கம் அரிக்கவே
தீரா வலியில் துயிலிழந்தி ருக்க
வரப்பிர சாதமாய் வங்கிக் கணக்கில்
வரவைத் ததரசு வாரா திருந்த
பலாயிரம் கோடிப் பணமனைத்தும் ஓரிரவில்
செல்லாத தாக்கி யதை
12-11-2016