என் ஆசையும் அவள் அழகும்

அவள் அருகே நானும் என்
அருகே அவளும் என்றும் இருக்க
ஆசை எனக்கு !

தேன் என்று
கூறினால் இனிக்காத
நா அவள் நாமம் கூறின்
இனிக்கும் என்று உணர்ந்து கொண்டேன்
அவள் நாமம் கூறின் !

அவள் வாய் மொழி கேட்டு
ஆனந்தம் கொள்ளும்
செவிச்சுவை என்றும்
சுவைத்திட ஆசை எனக்கு !

பாரடி பெண்ணே உன்னை
பார்த்து பார்த்து பூத்து
சிவந்து போன என் கண்கள்
உன் வருகையை காண மேலும்
காத்திருக்கிறது !

அவள் மடியில் தலை சாய்ந்து
பல கவலைகளை மறந்து
ஆனந்தம் கொள்ள
ஆசை எனக்கு !

உலகில் பார்த்து மகிழும்
ஒட்டு மொத்த அழகினையும்
அவள் உருவில் கண்டு
அதிசியத்து போய் நிற்கிறேன்
அவள் தெருவில் !

இது ஆசை இல்லை பேராசை எனக்கு
இது அவள் அழகில்லை பேரழகு அவளுக்கு !

எழுதியவர் : அன்னை பிரியன் மணிகண்டன் (19-Nov-16, 12:59 pm)
பார்வை : 283

மேலே