இலட்சியப்பாதை

இளைஞனே
மேகங்களல்ல
உன் கனவுகள்
கலைந்து போவதற்கு !

கோலங்களல்ல
உன் எண்ணங்கள்
அழிந்து போவதற்கு !

மின்னல்களல்ல
உன் லட்சியங்கள்
தோன்றியவுடன்
மறைந்து போக !

வானம் அல்ல
உன் கண்கள்
கண்ணீரை
மழையாய்ப் பொழிய !

நீர்க் குமிழல்ல
உன் இதயம்
காற்று பட்டால்கூட
உடைந்து போவதற்கு !

புலம்பல்களல்ல
உன் கவிதைகள்
படித்துவிட்டு
பரணில் போடுவதற்கு !

சராசரி மனிதனல்ல நீ
பிறந்து,வளர்ந்து,
சாவதற்கு !

சாதிக்கப் பிறந்தவன் நீ !
சோதனைகளைக் கண்டு
சுருண்டு விழாதே !

எதிர்ப்புகளை
எதிர்கொள் !

வாழ்க்கைப் பயிருக்கு
நம்பிக்கை உரமிட்டு
நாள்தோறும்
வளர்த்து வா !

என்றாவதொரு நாள்
உன் இலட்சியத்தை
அடைவாய் என்ற
நம்பிக்கையோடு.......... !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (26-Nov-16, 2:32 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 971

மேலே