தமிழர்களின் வீர வரலாறு
தமிழன் என்றால் படைப்பான் வரலாறு
வீரமும் அவனின் உடைவாள் பிறப்போடு !
போராடும் குணமோ தேரோடும் நெஞ்சில்
தன்னலம் இருந்திடா நிகரிலா இனமவன் !
அழியாத வரலாறும் ஆயிரம் ஆயிரமுண்டு
கலையாத நினைவில் நிலையாக இன்றும் !
நானறிந்த காலமாகக் கோரினான் தனிநாடு
நாகரீக வழியில் வாதிட்டான் இலங்கையில் !
காற்றினில் கலந்திட்ட கடைசி மூச்சுவரை
போராடித் தமிழரைக் காத்தத் தளபதியவன் !
களத்தினில் நின்ற கள்ளமிலா நெஞ்சமவன்
ஈழத்து சிங்கமவன் ஈடில்லா பிரபாகரன் !
நேற்றைய நிகழ்வும் இன்றைய செய்தியும்
நாளைய வரலாறே என்பதையும் அறிவீரே !
துப்பாக்கி குண்டு துளைத்தக் கொடுமையது
அப்பாவித் தமிழர்கள் உயிர்விட்டத் துயரமது !
வாசித்த வரலாறுகள் அச்சிட்டப் புத்தகங்களில்
ஈழத்தமிழர் வாழ்வோ வற்றாத நினைவுகளில் !
நாம்கண்ட காட்சிகள் நானிலத்தில் சாட்சிகள்
அடுத்தத் தலைமுறைக்கு அழியாத வரலாறு !
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
