மனிதனின் சிற்பி -அம்மா
தாலாட்டுப் பாடி தோள் மேலே போட்டு
கண்ணான கண்மணியா பார்த்த ஆத்தா!!
உன்ன விட்டா வேற தெய்வம் யாரு பார்த்தா???
கட்டி வாரி அணச்சு கக்கத்திலே எடுத்து
காவலாகப் பார்த்துக்கிட்ட என் ஆத்தா!!
உன்ன விட்டா சொந்தம் ஏது சொல்லு ஆத்தா???
பத்து மாசம் தவமிருந்து
பத்திரமா என்ன பார்த்து
முத்துக் கல்லாய்
பெத்தெடுத்த ஆத்தா!! இரத்தப்
பால் கொடுத்து என்
பசியும் தீர்த்தா
சிறு முள்ளு காலில் குத்தினாலே
கண்ணில் நீர வார்ப்ப
மாரிலென்ன போட்டுப் பாட்டுப்
பாடி தூங்க வைப்ப
பள்ளிக்கூடம் பாசத்தோட என்ன
அனுப்பி வைப்ப....
புள்ள எப்ப வருவானுதான்
வாசலிலே நிப்ப!
உனக்குப் பட்ட கடன நானும்
தீர்ப்பதுதான் எப்ப.....என்
கண்ணீரால் உன் காலைக் கழுவி
வட்டி தாரேன் இப்ப......