எழுப்பாதே
பிள்ளை உறங்கட்டும்,
பெரியவர்களே அதை
எழுப்பவேண்டாம்..
பார்க்கவேண்டாம் அது
நீங்கள் படும் பாட்டை-
பணத்துக்காக..
மனிதம் மறந்து
பணத்தை நினைக்கும்
மனது அதற்கு வரவேண்டாம்..
இறப்பு மறந்து
இரக்கமின்றி அதைக்
கறக்கும் வழிகளை அது
காணவேண்டாம்..
சேர்த்த பணத்தை
நன்றாய்ச்
செலவிடாமல்,
மண்ணில் புதைத்து
மண்ணில் புதைவதைக்
கண்ணில் காணவேண்டாம்..
தூயதை மறந்து
தீயதை வளர்க்கும்
பணம்படுத்தும் பாட்டை அது
பார்க்கவே வேண்டாம்..
அதனால்,
பிள்ளை உறங்கட்டும்,
பெரியவர்களே அதை
எழுப்பவேண்டாம்...!