அடைக்கலம் கவிதை

*
ஆறுதலாய் முகடுகள் இரண்டும்
இறுக்கி அணைத்தது என்முகம்.
*
என் கண்ணீரோ உப்பு
உன் கண்ணீரோ இனிப்பு
*
உடல் சூட்டின் வெப்பத்தில்
அடங்கியது கார்த்திகை குளிர்.
*
சிந்தியது தேன்
பூவை ருசித்த வண்ணத்துப்பூச்சி
*
குளிரில் நடுங்கிய பூனைக்கு
அடைக்கலம் தந்தது படுக்கையறை.
*
நனைந்தப் பூவிற்கு
முக்காடு எதற்கு…?
ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (15-Dec-16, 6:53 am)
பார்வை : 576

மேலே