ஏக்கம்
அன்பே
என் உயிர் என் உடலில் இருந்தும்
என் உடலில் உணர்வுகள் இருந்தும்
ஏதோ ஒரு உருவத்தினை ஏனோ
ஏங்கி தேடுகிறேன்!
ஏதோ ஒருஉயிரின்
ஒருநொடி பார்வைக்காக
ஏனோ ஏங்குகிறது என் இதயம்!!
எத்தனை திசைகள் இருந்தும் ஏனோ
ஒருதிசையினை ஏக்கத்துடன்
பார்க்கிறேன்!!!
எத்தனை வழிகள் இருந்தும் ஏனோ
ஒருவழியினை பார்த்து பார்த்து
விழிகள் பூர்த்தது!!!
என் இதயம் எத்தனை முறை
ஏங்கி ஏங்கி ஏக்கத்துடன்
பார்த்தாலும் என் வாழ்வில்
மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே!!
இந்நிமிடம் வரை என்
ஏக்கம் தொடர்வது
உயிரே உனக்காகவா?!
இல்லை
உன்னிடம் என்னை தொலைத்த
எனக்காகவா?! என
இன்றுவரை ஏங்குகின்றது
என்னவளே ஏனோ
என் இதயம்!!!!!