அவள் ஒருத்தீ

அவள் ஒருத்தி(தீ)
******************


கண்ணீர் கடலில் துடுப்பு போட்டு
காற்றை வளைத்து கையில் அடக்கி
கனவுகளை இரவில் தேடாமல்
நிஜத்தில் நிழலாய் ஒருத்தி(தீ)

துன்பத்தை முறைத்து மூட்டை கட்டி
அனுபவங்களை பரிசாய் பெற்று
அனுதாபங்களை குப்பையில் இட்டு
விருட்சமாய் எழுந்தாள் ஒருத்தி(தீ)

துரோகங்களின் வாசலில்
பூத்தூவிடும் வசந்தமாய்
ஏளன பார்வைகளை எரித்து
சாம்பலாய் மாற்றும் ஒருத்தி(தீ)

தென்றலை சூறாவளியாய்
சூறாவளியை தென்றலாய்
சுமைகளை சாந்தமாய் ஏற்று
சாகசம் செய்தாள் ஒருத்தி(தீ)

உலகம் போற்றும் உத்தமியாய்
பெண்மைக்கு உதாரணமாய்
வாழ்க்கையின் அர்த்தங்கள் அறிந்து
வாழ்ந்து காட்டினாள் ஒருத்தி(தீ)

சப்னா செய்ன்

எழுதியவர் : சப்னா செய்ன் (16-Dec-16, 8:09 pm)
பார்வை : 114

மேலே