தித்திக்கிதே உன் ஏக்கம், தொலைந்து போனதே அன்பே என் தூக்கம்,

என்னோட சொந்த கவிதை நல்லாருக்கா
லிரிக்ஸ் மாடல் ல எழுதினேன்
.
குட் நைட் ஆல்
.
வண்ணம் கொஞ்சும் பூக்களை போல்
உன் நிழலில் காண்கிறேன் பல
வண்ணங்கள்
நீயே பூ என்பதால், அந்த பூவின் மகள் என்பதால்
.
என் கன்னம் உரசும் உன் இதழ்கள்
ரோஜா பூவிதழ் என்றே நினைத்து தடுக்காமல் திகைக்கிறேன், தித்திக்கிறேன்,
.
நெற்றிப்பொட்டு நீ வைத்து
அலுங்காம குலுங்காம
அன்னநடை நீ நடந்தால்,
என் கண்கள் பத்தி கொண்டு
உன் பின்னே சுத்தி கொண்டு
சிணுங்குதே, சிலிர்க்குதே,
.
உன் தலைமுடியை நீ அல்லி முடிக்காமல்
அவிழ்த்து விட்டு
அதில் ஒத்தை ரோசா வச்சிக்கிட்டு
கண் முன்னே நீ நிக்கயிலே
என் வயசு ஏனோ தவிக்குது
என் மனசு ஏனோ தாவி குதிக்கிது,
.
உன் முட்டை கண்ணு சிவக்க
உன் புருவம் தூக்கி நீ என்னை மிரட்ட
பயம் இல்லையென்றாலும்
கொலை நடுங்கும் நடிப்பு நடிக்க தோணுது தோணுது
.
காஞ்சி பட்டு நீ உடுத்தி
அந்த பருத்தி பஞ்சை போல நீ அசைஞ்சா
காஞ்சி போன என் கனவும்
நந்தவனமாகுமடி, தந்தனானாம்பாடுமடி,
.
கள்ளம் இல்லா உன் வெள்ளை சிரிப்பு
என் நெஞ்சமெல்லாம் கோலம் போடும்
எனக்கு அதா பாத்தாலே அப்படியே வாரி போடும்
.
உன் காலடி என் வாசப்படி
உன் விறல் நகம்
கிறினாலும் இல்லை கிள்ளினாலும்
வழியில்லை இன்ப சுகமடி
.
நீ பேசும் மொழி உனக்கு தாய் மொழி என்றால்
எனக்கு அதுவே தந்தை மொழியடி
வந்தேன் நான் உன்னி தேடி தேடி

எழுதியவர் : திருச்சி பிரவீன் லிரிக்ஸ (20-Dec-16, 9:02 pm)
பார்வை : 260

மேலே