ஒரு ஆன்மாவின் காதல்

பவன்,எழில் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
பவனின் சொந்தவூர் திருநெல்வேலி.எழிலின் சொந்தவூர் சென்னை.
எழில் சென்னையில் மல்டி நேஷ்னல் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கிறான்.
பவனுக்கோ சரியான வேலை ஒன்றும் அமையவில்லை.அதனால் சென்னையில் உள்ள எழிலிடம் உதவி கேட்டான்.
எழிலோ கிளம்பி வாடா என் விட்டில் தங்கி வேலை தேடுடா என்றான்.
பவனும் ஊரில் இருந்து கிளம்பி வந்து வேலை தேட ஆரம்பத்தான்.
ஒரு நாள் இரவு 7 மணி இருக்கும் பவனின் செல்போனில் சார்ஜ் இல்லைனு எழிலிடம் சார்ஜ்ர் வாங்க அவன் அறையின் கதவை தட்டினான்.
கதவு திறக்கபடவில்லை.
வேகமாக தட்டி பார்த்தான்.அப்பவும் திறக்கல பயத்தில் கதவின் ஓட்டை வழியாக உள்ளே இருக்கறானானு? பார்த்தான்.
உள்ளே எழில் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தான்.
மேலும் யாரிடமோ மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான்.
பவனுக்கு பயத்தில் கையும் ஓடல காலும் ஓடல விறு விறுவென அவனுடைய அறைக்கு சென்றான்.
நீண்ட யோசனைக்கு பிறகு தூங்கினான்.
தொடரும்....

எழுதியவர் : இவண் (25-Dec-16, 8:22 pm)
சேர்த்தது : இவண்
பார்வை : 523

மேலே