எப்பொழுதும் உழவு

காலை
மாலை
இரவு
எப்பொழுதும்
உழவு

என்
உண்மைக்கடவுள்
உழவனுக்கு

இவ்வுலகமே
நன்றிக்கடன் பட்டிருக்கு
இவன்
ஒருவனுக்கு

வான் மழை
பொய்த்தாலும்
இவனின்
நெற்றியின்
வியர்வை மழை
எப்பொழுதும்
பொய்க்காது

ஏன்னெனில் ?
பச்சை பயிர்
கருகுவது
இவன்
மனதிற்கு
எப்பொழுதும்
பொறுக்காது !

எழுதியவர் : சூரியன்வேதா (9-Jan-17, 7:15 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 101

மேலே