முதற் கவிதை

வாழ்க்கைக்கு போராடும் மனிதன் போல
வார்த்தைக்கு போராடும் கவிஞன் நான்...
பூ முதல் தேன் வரை ...
காதல் முதல் காமம் வரை ..
தாய் முதல் சேய் வரை ...
பெண் முதல் கண் வரை ....
நிலா முதல் விழா வரை ..
அனைத்தும் சொல்லி விட்டிர்கள் ...
நான் எதை சொல்ல ..
வாழ்க்கைக்கு போராடும் மனிதன் போல
வார்த்தைக்கு போராடும் கவிஞன் நான்...
பல கவிதை புத்தககங்களை படித்தும் பார்த்தாகி விட்டது ..
படித்த புத்தகங்களை எரித்து குடித்தும் பார்த்தாகி
விட்டது..
இனி என்ன செய்வது ..
கவிஞர்கள் உலகில் வார்த்தைகளை கடன் கொடுக்கவோ பெறவோ முடியாதாம்...
வாழ்க்கைக்கு போராடும் மனிதன் போல
வார்த்தைக்கு போராடும் கவிஞன் நான்...
கவலை இல்லை ..
நான் எழுத துணிந்து விட்டேன் ...
அது தவறு என்றாலும் சரி என தலை ஆட்ட
என் நிழல் இருக்கும் துணிவால்...
நான் எழுத துணிந்து விட்டேன் ...
வாழ்க்கைக்கு போராடும் மனிதன் போல
வார்த்தைக்கு போராடும் கவிஞன் நான்...

எழுதியவர் : (8-Jul-11, 5:16 pm)
சேர்த்தது : arjunkarthik007
பார்வை : 285

மேலே