துன்பம் கண்டு வருந்தாதே

சிற்பியின் கைவண்ணத்தில்
சிற்பமாகும் சொற்பப்பாறைபோல்
துன்பமும் இன்பமாகும்
அறிவுடையோர் ஆளுமையால்!

இடர்கண்டு வருந்தாதே
இருகண்கள் கலங்காதே
இடுக்கண் களைந்திடலாம்
தொடர்ந்து நீமுயன்றால்!

எழுதியவர் : ரசீன் இக்பால் (17-Jan-17, 9:11 pm)
பார்வை : 1184

மேலே