முதல் கவிதை
என் மனம் ஈன்ற முதல் குழந்தையே
நான் பெற்ற தலை பிள்ளையை கூட
நான் இத்தனை முறை தழுவ வில்லையடா
பிள்ளைதனை ஈன்ற பொழுது கூட
இப்படி நான் மகிழ்ந்ததில்லையடா
உன்னை பார்க்கும் போதெல்லாம் நான்
புதிதாய் பிறந்தேனடா
என் கருவை தெரிந்தே சுமந்தேன்
கருவறையில் !!!!
நீ எங்கடா ஒளிந்திருந்தாய்
என் மன அறையில்!!!!!