நீயும் என் தாய்
உதிரத்தைப் பாலாக்கி
உணவாக்கித் தருகின்ற
உன்றனையே எந்நாளும்
கோமாதா என்றெல்லாம்
கோயில்கட்டிக் கும்பிடுவோம் !
பாமாலை பாடியுமே
பாலான அமுதத்தைக்
கறந்தேநாளும் பாலகனின்
பசிபோக்கப் பாடுபடுவோம் .
தாயாக மாறிநீயும்
தரணிதனைக் காக்கின்றாய் !
சேயான என்குழந்தைச்
செழுமையுடன் வாழ்வதற்கே !
கறந்த பாலுக்கு ஈடுண்டோ !
காசினியில் சொல்லிடுகள் !!!
நீயும் எனக்கோர் தாய் !!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்