மனிதனாக இரு

மனிதனாக இரு!

சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினி பூச்சிகளை
கொன்று குவிக்காதே !

பள்ளி செல்ல
மனமில்லையா ?
பாதகமில்லை
பள்ளி செல்லும்
குழந்தைகளின்
பாடப் புத்தகங்களை
மறைத்து வைக்காதே !

உண்மை பேச
மனமில்லையா ?
அது குற்றமில்லை
அரிச்சந்திரன் வரலாற்றை
குற்றம் கூறி
பொய்யின் உதட்டிற்கு
சாயம் பூசி
அழகு பார்க்காதே !

கொடுமை கண்டு
குமுறவில்லையா ?
பரவாயில்லை !
கொடுமை கண்டு
தடுக்க ஓடும்
கால்களை வெட்டி
வீழ்த்ததே !

மனித நேயமிக்க
மனிதர்கள் மீது
மலர்களை
தூவ முடியாவிடில்
முட்களை எறிந்து
காயப்படுத்தாதே !
எவ்வுயிரும்
தம் உயிர்போல் நினை!
முடியாவிடில்
வாழும் வரையாவது
மனிதனாக இரு !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (10-Feb-17, 2:53 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : manithanaaga iru
பார்வை : 1371

மேலே