ஏனடி விட்டுச்சென்றாய்

ஏனடி விட்டுச்சென்றாய் ?
என் மதி, மறதி ஆனதா ? அல்ல
என் குருதியில் கிருமி சேர்ந்ததா ? அல்ல
என் கண்களில் பூ பூத்ததா ? அல்ல
என் செவியும் செவிடானதா ? அல்ல
என் காதலில் காமம் இருந்ததா?ஆதலால்
நம் காதலும் காலாவதி ஆனதா ?
காரணம் இருந்து விட்டுச்சென்றாயா ,அல்ல
காரணம் இல்லாமல் விட்டுச்சென்றாயா ?
ஏனடி விட்டுச்சென்றாய் !!!

எழுதியவர் : மதியழகன் (21-Feb-17, 3:34 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 78

மேலே