முத்து முத்து சிரிப்பழகா முல்லைப் பூ பல்லழகா - நாட்டுப்புறப் பாடல்
முத்து முத்து சிரிப்பழகா!
முல்லைப் பூ பல்லழகா!
முத்தம் ஒன்னு நானும்
தாரேன் ! கண்ணுறங்கு
கண்ணே நீ கண்ணுறங்கு !
தாலாட்டுப் பாடுகிறேன்
தாலேலோ தாலேலோ
தங்கமே வைரமே
கண்ணுறங்கு கண்ணே
நீயும் கண்ணுறங்கு !
அழகான ரத்தினமே !
அழுவாம கண்ணுறங்கு !
அத்த அடிச்சாலோ
அரளிப்பூ செண்டாலே !
மாமன் அடிச்சானோ
மல்லிகைப்பூ சரத்தாலே !
சிரிச்சாலே செண்பகப்பூ
சீமைஎல்லாம் பூத்திடுமே !
சிங்காரச் சிட்டே !
என் பட்டுவண்ண கன்னத்தில
உன் எச்சில் வச்சு முத்தம்
தாடா ! என் துன்பமெல்லாம்
மாறிப்போயி உனை
அணைப்பேனே அன்போட !
என் குடும்பம் தழைக்க
வந்த குலக்கொழுந்தே !
செல்வமே ! யார் அடிச்சு
நீ அழுத ! அடித்தாரைச்
சொல்லி அழு !
அபராதம் போட்டுடுவோம் !
இப்ப நிம்மதியா கண்ணுறங்கு !
நீயும் கண்ணுறங்கு !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்