கல்லறை பூக்கள்

விரல்கள் தீண்டுவதை
வெறுக்கும் மலர்களின் மத்தியில்
விழிகள் என்னை தீண்டாதா?! என்று
இன்று வரையும் ஏங்கி பார்க்கிறேன்!,

விதி என்னும் விதியால்
இன்று வரையிலும்
வீதியில் மட்டுமே மனமற்று
மணம் வீசுகிறேன்!
மல்லிகையுடன் சேர்ந்து,

கவணிக்க கண்கள்
இல்லாத வேலையில்
கவலைகளால் மட்டுமே
காய்ந்து வருகிறேன்,

காலமெல்லாம் கன்னி அவள்
என்னை சூட வேண்டும் என்று
வளர்ந்தேன்! அன்று
ஆனால்
கல்லறையை விட்டுகூட
கடந்து செல்ல முடியாமல்
கண்ணீர் வடிக்கின்றேன்! இன்று
கல்லறை பூக்களாக...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Feb-17, 11:11 am)
Tanglish : kallarai pookal
பார்வை : 305

மேலே