ஆப்பிள் பழத்துடன் இறக்குமதியாகும் ஒரு நோய்

ஆப்பிள் பழத்துடன் இறக்குமதியாகும் ஒரு நோய்!

கடைகளில் வாங்கும் ஆப்பிள்களின் தோலை இலேசாக நகத்தால் சுரண்டினால் மெழுகு போன்ற ஒரு பொருள் திரண்டு வரும். சந்தேகம் வேண்டாம், அது மெழுகுதான். இந்தியாவில் ஆப்பிள்களின் விளைச்சல் காலம் என்பது ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை மட்டுமே. இமாச்சல பிரதேசம், உத்த்ராஞ்சல், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. சீசன் இல்லாத காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிலி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

பொதுவாக ஆப்பிள்களில் ஒரு இயற்கை மெழுகுப் பூச்சு இருக்கும். இது பத்து நாட்களுக்கு மட்டும் ஆப்பிள்களுக்கு கவசமாக இருக்கும். அதற்குமேல் தாங்காது. வியாபாரிகளுக்கு இந்த 10 நாள் தான் இயற்கை தந்த கெடு. ஆனால் அவர்கள் அது போதாதென்று ஆப்பிளை தண்ணீரில் கழுவி இயற்கை மெழுகுப் பூச்சை அகற்றிவிட்டு, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் செயற்கையான ஒரு மெழுகுப் பூச்சை பூசுகிறார்கள். இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் மெழுகில் முழ்கி எடுக்கப்படாத, ஒரு ஆப்பிள் கூட வருவதில்லை. வெளிநாடுகளிலேயே, இதை செய்துதான் அனுப்புகிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து மெழுகில் குளித்து வரும் ஆப்பிள்களை மேலும் பளப்பளப்பாக காட்டுவதற்காக,நம்மூர் வியாபாரிகள் பெட்ரோலிய மூலப்பொருளில் இருந்து எடுக்கப்படும் நைட்ரேட் கலந்த செயற்கை மெழுகு திரவத்தில் மூழ்கவைத்து எடுக்கிறார்கள். அதோடு உள்நாட்டு ஆப்பிள்களையும் இந்த மாதிரி மெழுகில் குளிப்பாட்டி அதில் ஸ்டிக்கர் ஒட்டி, வெளிநாட்டு ஆப்பிள்கள் என்று கூறி அதிக விலைக்கு விற்கிறார்கள். மெழுகோடு நைட்ரேட் சேர்க்கப்படுவதால் பளபளப்பும் கவர்ச்சியும் கூடுகிறது. நீர்சத்து வெளியேறாமல் இருப்பதால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கிறது.

மெழுகில் சேர்க்கப்படும் நைட்ரேட், "நைட்ரைஸோ மார்போலின்" என்ற இராசாயனத்தை உருவாக்குகிறது. இது கேன்சர் நோய்க்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இப்போது ஆப்பிள் மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கு, செர்ரிப்பழம், குடைமிளகாய் போன்றவற்றிலும் மெழுகுப் பூச்சு பூசப்படுகிறது. இந்த மெழுகு நமது உணவுக் குழாயில் செரிமானம் ஆகாமல் அப்படியே படிந்து நின்றுவிடும். இந்தப் படிமம் கேன்சரை உருவாக்கிவிடும் என்கிறது மருத்துவம்.

தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது, இல்லையென்றால் கொதிக்கும் நீரில் கழுவி மெழுகை வெளியேற்றிவிட்டு சாப்பிடுவது தான் நமக்கு நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

நன்றி: தினத்தந்தி

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (1-Mar-17, 8:25 pm)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
பார்வை : 522

சிறந்த கட்டுரைகள்

மேலே