அந்தியில வானம்

அந்திவானம் செம்மஞ்சள் அழகியாகத் தோன்றும்!
செந்தூரப் பொட்டாகச் செங்கதிரும் மின்னும்!
சந்திரனும் மெதுவாகத் தன்வரவைச் சொல்லும்!
பந்தலிலே விண்மீன்கள் பாங்காகப் பூக்கும்!
விந்தைமிகு அழகினையே விழிவிரிய நோக்கும் !
சிந்தையிலே குறுங்கவிதை தேனாறாய்ப் பாயும் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-17, 2:47 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 187

மேலே