அந்தியில வானம்
![](https://eluthu.com/images/loading.gif)
அந்திவானம் செம்மஞ்சள் அழகியாகத் தோன்றும்!
செந்தூரப் பொட்டாகச் செங்கதிரும் மின்னும்!
சந்திரனும் மெதுவாகத் தன்வரவைச் சொல்லும்!
பந்தலிலே விண்மீன்கள் பாங்காகப் பூக்கும்!
விந்தைமிகு அழகினையே விழிவிரிய நோக்கும் !
சிந்தையிலே குறுங்கவிதை தேனாறாய்ப் பாயும் !!
சியாமளா ராஜசேகர்