வீர மங்கை

வீர மங்கை!
கவிதை by : பூ. சுப்ரமணியன்
பெண்ணே ... ..
வீட்டிலே நீ
அடைந்து கிடக்கும்
கூண்டுக் கிளியல்ல
நாட்டையே ஆளும்
வீர மங்கை நீ !
நீ நிற்கும்
நெடுமரம் அல்ல
நீரில் மிதக்கும் மரக்கலம் !
அனைவருக்கும்
அடைக்கலம் தரும்
மனிதநேய வீர மங்கை!
நீ
அலங்காரப் பதுமையல்ல
அணி வகுத்து
நாட்டைக் காக்கும்
நிற்கும் வீர மங்கை !
நீ
பயனில்லாக்
காட்டுப் பூ அல்ல
மக்கள் விரும்பும்
மங்கையர் மலர் !
நீ
பாலியல் தொந்தரவு
கண்டும் கேட்டும்
பதுங்கும் பூனையல்ல
பாயும் பெண் புலி !
நீ
நுகர்ந்து எறியும்
மலரல்ல
என்றும் எப்போதும்
அனைவரும் விரும்பும்
வீரம் மணக்கும்
சந்தன மலர்கள் !
நீ
வன்கொடுமை
கண்டும் கேட்டும்
வளைந்து செல்லும்
நதியல்ல
ஆர்பரிக்கும் கடல் !
நீ
பெண் உரிமைக்காக
மண்டியிடாமல்
வீரத்துடன் போராடி
உயிர் விடும்
கவரி மான் !
நீ
வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்
காட்டு விலங்கல்ல
இல்லத்தில் என்றும்
தீப ஒளி வீசும்
குத்து விளக்கு !
நீ
நீரோட்டம் அல்ல
மனித உள்ளங்களை
உணர்ந்து செல்லும்
உயிரோட்ட மங்கை !