தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு நிழல் தேடி கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !

நிழல் தேடி ! கவிஞர் இரா .இரவி !

விழிகளை விற்று ஓவியம் வாங்கிய கதையாக
விறகிற்காக மரங்களை வெட்டி நிழல் தேடுகின்றனர் !

மரம் பூ காய் கனி நிழல் மட்டும் தரவில்லை
மானுடர் சுவாசிக்க நல்ல காற்றும் தருகின்றது !

மரம் என்பது மழைக்கான வரவேற்பு
மனிதர்கள் புரிந்து மரம் வளர்ப்பது சிறப்பு !

வார்தா புயல் சென்னைக்கு நிழல் தந்த மரங்களை
வேரோடு வீழ்த்தி மகிழ்ந்து சென்றது !

வீழ்ந்த மரங்களின் எண்ணிக்கையில் பன்மடங்கு
விரைவாக புதிய மரங்கள் நட வேண்டும் !

விளம்பரத்திற்காக மரங்கள் நட்டால் போதாது
வளரும் வரை தொடர்ந்து நீர் ஊற்ற வேண்டும் !

சாலைக்காக ஆலைக்காக என்று கண்டபடி
சாய்க்கின்றனர் அற்புத மரங்களை !

ஒரு மரம் வெட்டப்பட்டால் ஈடாக
உடன் பத்து மரங்கள் நடவேண்டும் !

நீதி மன்றங்கள் பதில் மரம் நடவேண்டுமென
நியாயத் தீர்ப்புத் தந்தாலும் மதிப்பதில்லை !

மரம் வளர்ப்பு என்பது அறம் வளர்ப்பு
மானிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும் !

காடுகளை அழித்து வீடுகள் கட்டுவதை
கட்டாயம் உடன் நிறுத்திட வேண்டும் !

தனியார் அரசாங்கம் யாராக இருந்தாலும்
தனி ஒரு மரம் வெட்டும் முன் பத்து மரம் நடுங்கள் !

மரம் வெட்டுதலை கொலைக் குற்றமாக்கி
மரம் வெட்டுவோருக்குத் தண்டனை தர வேண்டும் !

பச்சையம் காக்க பசுமை காக்க நமது
பூமியில் மரங்களைக் காத்திட வேண்டும் !

மரங்களை அழிக்க அழிக்க இயற்கை
மனிதனை அழிக்கும் என்பதை உணருங்கள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-Mar-17, 12:26 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 72

மேலே