உறங்காத இமைகள் --- குறுங்கவிதை

உறங்காத இமைகள் --- குறுங்கவிதை


உறங்காத இமைகளிலே
உறவாடும் கனவுகளே !
மறக்காத நினைவுகளில்
மலர்கின்ற வாசங்கள் !
பிறக்கின்ற போழ்தினிலே
பிறர்க்காக வாழ்கின்ற
சிறப்பான செயலினாலே
சீராகும் உணர்வுகளும் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Mar-17, 11:44 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 99

மேலே