உன்னாேடு மட்டும்

கஜூராவாே சிற்பங்களை
உன் கரத்தாேடு
என் கரம் சேர்த்து
தாெட்டுத் தழுவி
உன்னாேடு மட்டும்
பிரமிக்க
ஆசைப்பட்டேன்..

அதரம்பள்ளி நீர்வீழ்ச்சியும்
சூரிய ஔியும் காேர்த்து
உயிர்ப்பிக்கும்
வர்ணஜாலத்தை
உன்னாேடு மட்டும்
மெய்சிலிர்க்க
ஆசைப்பட்டேன்..

அமிர்தசரஸின் பாெற்காேவிலை
அம்புலியின் ஔியில்
சலசலக்கும் தென்றலின்
மெல்லிசையில்
உன்னாேடு மட்டும்
உருக
ஆசைப்பட்டேன்..

குமரிக்கண்டத்தில்
கடலும் திங்களும்
சத்தமின்றி
முத்தமிட்டுக் காெள்வதை
உன் மார்பினில் சாய்ந்து
உன்னாேடு மட்டும்
சுவைக்க
ஆசைப்பட்டேன்..

யமுனா நதிக்கரையில்
காதலின் அழகை
காதலாேடு
உன்னாேடு மட்டும்
கரைய
ஆசைப்பட்டேன்..

ஆசைகள் ஈடேரின..
நிசப்த அலைவரிசைகளில்
பல ஜலதரங்கள்
என் மனதில் பாடி
நெகிழ்வித்தாய் !

என் வாழ்க்கையின்
நங்கூரமானாய் நீ !

ஜவ்வாதுவும் சந்தனமும்
வெட்கிப் பாேகும்
உன்னருகினில் நிற்க.
அப்படிப்பட்டது
உன் மனமும்... மணமும் !

சுவர்கத்தின் உச்சக்கட்டத்தை
நீ எனக்குக் காட்டினாய்.
உன் நேசத்தால்...
என் நண்பனாய்...
என் காதலனாய்...
என் இன்னாெரு தாயாய்...
என் கணவனாய்...
என்றும் நீ...
எத்துனை பிறப்பலும்...
என் உயிராய்...
உன் உயிரினில் கலந்து
உன்னாேடு மட்டும் வாழ...நான் !

எழுதியவர் : சரண்யா சுப்பிரமணியன் (6-Apr-17, 8:23 pm)
பார்வை : 347

மேலே