வாராயோ நீ வாராயோ
சிறகுக்குள் மறைந்திருக்கும் சிறுபறவைக் குஞ்சுபோலே
அலுங்காமல் உனைக்காப்பேன் அன்றிலே வாராயோ
பருத்திக் கிளையினிலே பறித்தெடுத்த இளம்பஞ்சாய்
பக்குவமாய் உனைப்பார்ப்பேன் பனிப்பூவே வாராயோ
மேனியைத் தழுவுகின்ற மென்மையிளம் தென்றல்போல்
வாழ்வில் சுகம்தருவேன் வாராயோ பெண்மயிலே
கூடையில் கிடக்கின்ற குலையாத முந்திரிபோல்
செழுமையாய் உனைவைப்பேன் சிறுமலரே வாராயோ
ஆக்கம்
அஷ்ரப் அலி