என்னவள் நிலவாய் வந்ததேனோ

காத்து காத்து கண்கள் பூத்தன
அண்ணாந்து பார்த்தேன் அங்கு
அவள் வீட்டு சாளரத்தில் மெல்ல
நிலவு ஒன்று நின்று காய்ந்தது
என்னைப் பார்த்து புன்னகைத்தது
இப்போது என் சித்தம் தெளிந்து
நான் காண்பது வெண்ணிலாவல்ல
நான் நித்தம் காண துடிக்கும்
என்னவளேத்தான் அந்த நிலவு என்று
இப்போது மீண்டும் பார்க்கையில்
விண்ணில் நிலவும் வீசிட -யார் அந்த
நிலவு பின் என்று மீண்டும் அங்கு
அந்த சாளரத்தை பார்க்கையில்
மருண்ட விழிகளின் இமைகள்
மூடி திறந்தன அந்த விழிகள் தந்தன
கள்ளப் பார்வை என்னை காந்தமாய் ஈர்த்தன
விழிகளின் கீழே பவள அதரங்கள்
சற்றே திறந்து முத்து சிரிப்பு உதிர்க்க
இன்று அவள், எனக்கு, என்னவள் அவளே
என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள்
சம்மதம் கிடைத்தது ஆஹா நான் தான்
உந்தன் காதலன் நம்பிடு என்னை
என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டு
அவள் முகத்தை அந்த நிலவொத்த முகத்தை
மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்து
மேல்நோக்கி அவள் வீட்டு சாளரத்தைப்பார்த்தேன்
அங்கு நிலவில்லை அவள் இல்லை
வானத்தில் நிலவும் மேகத்தின் பின்னே
மறைந்து விட்டது
என்ன செய்வது என்று தெரியாது
நானும் என் வீட்டிற்குள் சென்று விட்டேன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Apr-17, 7:32 pm)
பார்வை : 63

மேலே