ஏக்கம்

கலையாத கனவு வேண்டும்..
காணும் இடம் எல்லாம் நீ தெரியவேண்டும்....
விடியாத இரவு வேண்டும்...
முடியாத சரசம் வேண்டும்...
பிரிவில்லாமல் உன்னோடு வாழ வேண்டும்....
உன் மடியில் நான் சாக வேண்டும்...
கள்ளமில்லா. உன் அன்பு வேண்டும்..
கள்ளத்தனமாய் என்னை கட்டி அணைக்க வேண்டும்...
பிறவி எல்லாம் உன்னோடு நான் வாழ வேண்டும்...
உன்னை பிரிந்தால் இந்த பிறவி வேண்டாம்....!

எழுதியவர் : விஜயராகவன் (27-Apr-17, 12:19 pm)
சேர்த்தது : விஜயராகவன்
Tanglish : aekkam
பார்வை : 232

மேலே