நிறையருளான் நீள்சடையான்
சித்தமிரு மவனருளிற்
முக்தியிருஞ் செய்தியுமே
பக்தியினாற் கண்டுண்ட
அக்கால அடியார்களவன் கயிலை கணங்களோ...??!!
முக்கண்ண னொருபாக
முக்கால மிருமந்த
மலையாளு மென்னாளும்
அவனூடே அருள்வாளோ..?
சிந்தையு மேயவனெனவுஞ்
சந்ததும் சந்தங்களு
மிடைவிடா தோதிவரின்
விடையுடையான் வரவு
மடியவரி னகமிருமோ..??
கறைமனங் கழுவி
களியுடுத்து மொரு
கனியா மவனருளுந்
திரையாழி முத்தெனவே
முக்தியது மீந்திடுமே!!
நித்தியமு நீள்சடையா
நினைவதி லேயிருவோமே!
நிறையருளான் பிறைசூடி
யவனடியுஞ் சேர்வோமே!!!
சிவநிறைச்செல்வி