நற்றிணை -கார்த்திகா அ

இரட்டைக் குருவிகளில்
ஒன்றின் அலகு மற்றதின்
நெற்றியில் உரசிய போது
பாதாம் பச்சையிலிருந்து
சிவப்பாகி இருக்கலாம்
கீழே விழுந்து கிடக்கும்
இலைகளில் நகரும்
எறும்பின் கால்கள்
இதம் உணர்ந்திருக்கும்
காய்ந்த குச்சிகளில்
சிறு வீடு கட்டிக் கொள்கிறது
பொன்குஞ்சுக் காகமொன்று
வெளி வந்த வேர்களில்
இருக்கை அமைத்துச் சமைக்கிறேன்
கவிதைகளில்
பாதாமின் சுவை !

எழுதியவர் : கார்த்திகா அ (9-May-17, 12:28 pm)
பார்வை : 90

மேலே