தனியாக நான்

மஹேந்திரமான வானத்தினிலே
மாய மோஹனக் காற்றினிலே
பசுமை கொஞ்சும் மொட்டுகள்,
பறந்தோடும் வண்டுகள்,
பாடித்திரியும் பறவைகள்,
ஓடி மகிழும் ஓவியங்கள்,
சின்னஞ்சிறு கொஞ்சல்கள்,
செல்லச் செல்லச் சிணுங்கல்கள்
அழகான காட்சிகள்
அனைத்தையும் ரசித்தபடி
தனியாக நான்........
நிழலாடும் உன்
நினைவுகள்
நெஞ்சினில் இனிப்பதால்,
இந்த தனிமை
அழகானது............

எழுதியவர் : குழலி (9-May-17, 1:25 pm)
Tanglish : thaniyaaga naan
பார்வை : 653

மேலே