விளங்கவில்லை

சுண்டிவிட்டால் இரத்தம் வரும்
சிவப்பழகியில்லை நீ...

முக்காலிப் போல் பல்லிருந்தும்
முத்துப்போல் சிரிப்பழகியில்லை நீ...

காளைகளை கவர்ந்திழுக்கும்
கண்ணழகியில்லை நீ...

கண்ணைச் சுற்றி கருவளையம்
கன்னம் வற்றிய பகுதியில்
கருமேடாக பருக்கள்... – உன்
கருமை கன்னத்தில் வீற்றிருக்க...
தேன்குரல் தேவதையில்லை நீ...

ஆனாலும்...
நிதமும் உன் நினைவு – என்
நினைவை மறக்கச் செய்வதேனோ...?

இதற்கு பெயர் தான் காதலா...?
நீ மட்டுமே என் கண்களுக்கு
அழகாய் தெரிகிறாய்...
புரியவில்லை எனக்கு
காதல் என்றால் என்னவென்பது..?

எதற்காக என் மனம்
உனை நாடுகிறதென்று
இன்று வரை
எனக்கு விளங்கவில்லை...

*******************
சிகுவரா
ஆகஸ்டு 2௦௦3

எழுதியவர் : சிகுவரா (22-May-17, 2:31 pm)
சேர்த்தது : சிகுவரா
Tanglish : vilangavillai
பார்வை : 89

மேலே