எத்தனை ஆசைகள்

எத்தனை அழகு..! நீ..!
என் பார்வையில்..!
அவலட்சணம் கூட
அழகாத் தெரிகிறது...

எத்தனை இன்பம்..
உனை நினைக்கும்..
ஒவ்வொரு நொடியும்..!

காத்திருக்க வைத்ததற்கு..
கடும் தண்டனை..?
காதலில் அதுவே சுகமான சுமை..!

தவறாகப் பேசிவிட்டால்..
தலையில் ஒரு கொட்டு..
தறிகெட்டு ஓடிடும் மனம்..!

பிரியும் வேளையில்..
பட்டும் படாமலும்..
தொட்டும் தொடாமலும்..
என் கன்னத்தில் முத்தம்..
தலைக்கேறிடும் பித்தம்..
கலங்கிடும் சித்தம்..
விரும்பிடுவேன் நித்தம்..
நொடிக்கொரு ‘அந்த’ முத்தம்..!

எனக்கேனிந்த பொறாமை..?
எனது கன்னத்தில்..
உன் இதழ்கள் பதியச்செய்யாமல்..
அவன் கன்னத்தில்..
உன் இதழ்களை..
பயிரிட்டு விட்டாயே..?
கள்ளி..! திருட்டுக் கள்ளி..!
உன் மார்ப்புக்குள்..
ஓர் புகைப்படம்..
அவனாக என் முகம்..!

நிறைய கெஞ்சியும்..
கொஞ்சம் கொஞ்சியும்..
சீண்டிய பின் கிடைத்த..
இதழோடு இதழ் முத்தம்..
இன்பத்தின் அந்தம்..
இமைமூடி..
இதயம் சுருங்கி..
குருதி கொதித்து..
உடல் சிலிர்த்து..
நாளம் வெடித்து..
உயிர் உறைந்து..
நின்ற தருணமது...!

இச்ஜென்ம ஏக்கம்..
இத்தோடு நீக்கம்..
எச்ஜென்மமும் நின்பால்..
என் நினைவு சுற்றிட..
சூனியம் செய்த தருணமது...!

அவ்வப்போது உன் அணைப்பு..
உன் தானங்கள்
என் மார்போடு பிணைப்பு...
காது மடலுக்கு கீழே
சிறு கடிப்பு...
உன் வார்த்தைகளில்..
நளின நடிப்பு..
என்று நீள...

என் மடியில்..
உன் கண்ணீர்த்துளிகள்...
உன் கன்னத்தில்..
என் கண்ணீர்த்துளிகள்...

வெறிபிடித்த..
வேங்கையை..
வெறும்பார்வையால்..
விலங்கிட்டு..
விளையடுகிறாய்..
விந்தையடி..! எல்லாம் விந்தையடி..!

இத்தனை இன்பங்களும்..
இனிமையாய் தந்தாய்..
நிதமும் கனவில்...

இதயத்தை பரிமாறி..
இனிய காதலை சொல்லமுடியாது..
நிதமும் நிற்கின்றேன்..
நிஜத்தில்..!

******************
சிகுவரா
செப்டம்பர் 2004

எழுதியவர் : சிகுவரா (26-May-17, 4:24 pm)
Tanglish : ethtnai aasaikal
பார்வை : 340

மேலே