பள்ளிப் படிப்பு
அருமைப் பெற்றோர் அன்பிற்கும்
.....அயலார் உற்ற மகிழ்விற்கும்
பெருமை தேடிக் கொடுத்திடலாம்
.....பெருந்தகை எண்ணம் கொண்டிடலாம்
உருகத் துணியும் மெழுகாக
......உள்ளம் கனவில் மிதந்தாலும்
பருவத் தேடல் மறந்திங்கே
......பள்ளிப் படிப்பை தொடர்வோமே !