தாய் மகளுக்கு

பத்து திங்கள் பொத்தி வளர்த்த

பொக்கிஷா திங்களே!!

பரந்து விரிந்த உலகத்தில் வாழ்வதற்கு ,

பகுத்தறிவும் பக்குவமும் வேண்டுமடி,



இனியவளே!!

இடுக்கண் கலைந்து இதயத்தில் சுமந்து ,

இமை நேரத்திலும் மாறாததே நட்படி ,

மற்றவையணைத்தும் இதழின் சாயமடி ...



இக்கரைக்கு அக்கரை பச்சையடி ,

இன்றுவரை சிலபார்வை

கோணங்கள் மாறவில்லையடி ,,

குறையுள்ளவர் கண்களில்

அணைத்தும் குறைதானடி - ஆனால்

அனைவர் கண்களும் குறையகாதடி.....



பாலில் விஷமிருந்தால்

பார்வைக்கு தெரியாதடி ,

புலியின் வேசம் கலையும் வரை

பசு போல் பாசம் தொடருமடி,



கண்ணே இது !!

காலத்தின் சூழ்ச்சியடி ,

கலசாரத்தின் வீழ்ச்சியடி ,

அறிவுரை இல்லையடி ,

அக்கறை தானடி ,

அன்னப்பறவை போல் வாழ்ந்துக்கொள்ளடி .......

எழுதியவர் : வாசு செ.நா (8-Jun-17, 9:40 am)
பார்வை : 108

மேலே