வாழ்நாளின் வசந்தம் நீ

அழகான பொற்சிலையே ஆரமுள்ள பசுங்கிளியே
பழரசமே நடைரதமே பனிதூவும் பூவனமே
காலைக் கதிரவனைக் கண்டவுடன் மயங்குகின்ற
தாமரையாய் அகம்மலர்ந்தேன் தங்கமுனைக் கண்டவுடன்
என்னவளே கண்ணவளே என்னுடலில் இணைந்தவளே
நெஞ்சம் நிறைந்தவளே நீணிலத்தில் வாழும்வரை
கக்கத்தில் வைக்கின்ற கைக்குழந்தை போலென்னை
பக்கத்தில் எனைவைத்து பாசமுடன் பார்ப்பாயா
துக்கத்தில் என்னோடு துணையாக இருப்பாயா
ஆருயிரே என்னவளே ஆதரவாய் நீவேண்டும்
வாழ்நாள் முழுவதுமே வசந்தமழை பெய்யவேண்டும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (24-Jun-17, 1:57 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 300

மேலே