என் அந்திகாவலன்

என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் அவன்..

என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணித்தவன் அவன்..

எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..

இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..

என் அந்திகாவலன்..

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : .வைஷ்ணவ தேவி (26-Jun-17, 11:25 pm)
பார்வை : 899

மேலே