உலகம் சமநிலை பெற

இந்த உலகம் யுத்தத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறதென்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது நடைமுறையில்....

அணு ஆயுதச் சோதனை, போர்க்கான வெள்ளோட்டங்கள் என்று நாட்டுக்கு நாடு தனது திறமையை,
வல்லமையைக் காட்டி வருகின்றன ஓர் தொடர்கதையாக...

தீவிரவாதிகள் என்பவர்கள் யார்?
அவர்களின் நோக்கம் தான் என்ன?

ஆதிக்கவர்க்கம் எவனைக் கை காட்டுகிறதோ, அவனே தீவிரவாதியாம்...
ஆதிக்கவர்க்கம் எவனை ஆதரிக்கிறதோ அவனே நல்ல மிதவாதியாம்...
என்னவொரு கொள்கை!???...

விலங்குகளைவிட கீழான மனிதப்பிறவிகளே!
அன்பை மறந்து அழிக்க எண்ணம் கொள்ளும் உங்க காட்டுமிராண்டி செயல்களை யுகம், யுகமாக கைவிடாது பின்பற்றி வருகிறீர்களே!!

அன்புவழி, அமைதிவழி, ஆனந்தமடையாமல்,
ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள உயிர்களைக் கொன்றுக் குவிக்கும் உங்களுடைய மூளை குப்பைகளை அகற்றவே காலம் காலமாக தனித்துவக் கவி சிந்தனையாளர்களாய் அவதரித்து, கற்பனையின் சக்தியை நல்யுக்தியாக்கி, மனிதர்களை மீட்டெடுக்கக் கவி பாடிவருகிறோம்...

அன்பை உணருங்கள்.
கருணையை பருகுங்கள்..
தீவிரவாதி எனப்படுபவனுள் துடிப்பதும் இதயமென்று உணருங்கள்...
பிறக்கட்டும் எங்கும் சமநிலை...
ஒழியட்டும் ஆதிக்கவர்க்கம்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Jun-17, 6:49 pm)
பார்வை : 385

மேலே