தமிழ்த்தவம்

வான் வந்து ஒளி கேட்டது
வாள் வந்து கூர் கேட்டது
மான் வந்து விழி கேட்டது
மழை வந்து குளிர் கேட்டது
தேன் வந்து சுவை கேட்டது
திசை வந்து வழி கேட்டது
நான் வந்து மொழி தொட்டதும்
நளினங்கள் வெளிப் பட்டது.

வார்த்தையைச் சுண்டிப் பார்த்தேன்
வாழ்க்கையில் தினமும் வேர்த்தேன்
தீர்த்தமும் பருக வில்லை
தெய்வம்முன் உருக வில்லை
போய்த்தவம் இருக்க வில்லை
புலவர்கள் நெருக்கமில்லை.
தாய்த்தவம் தெரிய வில்லை
தமிழ்த்தவம் பிறந்து வந்தேன்!

எழுதியவர் : கனவுதாசன் (2-Jul-17, 11:49 am)
பார்வை : 186

மேலே