அவள் இடை அணைத்து நடக்கையில்
பொழிகின்ற மழையில்
ஒரு குடையின் கீழ்
அவள் இடை அணைத்து நடக்கையில்
கவிதை தர வந்த தமிழ் தயங்கி நின்றது
பின் நினைவில் வந்து நடக்கிறேன்
அப்பொழுது எழுது என்று விடை பகன்று சென்றது
பொழிகின்ற மழையில் நனைந்தவாறு ......
----கவின் சாரலன்