எனது கவிதை
என் கவிதையை படிக்க நான் யாருக்கும்
அனுமதி தந்ததில்லை
ஏனெனில் என் காதலுக்கு சொந்தக்காரர்கள்
யாரும் இல்லை
ஏட்டை நிரப்பிவிட்டு சாய்ந்து விடுவேன்
ஒரு ஓரமாய்
திருட்டு தனமாய் அவள் வந்து படிக்கிறாள்
தென்றலோடு கலந்து
காவலுக்கு முள் செடி ஒன்றை வளர்த்தேன்
அவள் வந்து தொட்டதால் அது ரோஜாவாக
மாறியது
இப்படிக்கு
என் நிலையை படு மோசமாய்
சில சமயங்களில் தர்ம சங்கடமாய்
என்ன செய்வேன் பலமுறை யோசித்தேன்
திடீரென்று தோன்றியது இந்த யோசனை
என் காதலை காவலுக்கு வைத்தேன்
அவள் நட்பு போர்வை போர்த்த மறுபடியும்
வந்தாள்
நொந்துவிட்டது என் மனம்
முடிவில் சொல்லிவிட்டேன்
என் கவிதையை நீ வாசிக்க வா
ஆனால் அதற்கு முன் என்னை சுவாசித்து விட்டு
போ என்று
வரவேயில்லை அவள்
ரோஜாவும் வாடிவிட்டது
முள்ளும் காய்ந்துவிட்டது
என் பக்க்ங்கள் மட்டும்
அவள் விரல் பட்டு விலக இன்னும்