காதலை காதலாகவே மட்டுமே

ஒற்றை புன்னகை உதிர்ப்பாய்
அதுவும் என்னிடம் "கவிதையாகி "
போகிறது !

ஒற்றை பார்வை வீசுவாய்
அதுவும் என்னிடம் "கவிதையாகி "
போகிறது !

மௌனம் உடைத்து ஒரு சொல்தான்
பேசுவாய் அதுவும் என்னிடம் " கவிதையாகி "
போகிறது !

உன்னுள் இருக்கும் என்மேலான "காதலை "
மட்டும் நான் கவிதையாக்க முற்படுவதில்லை !

காதலை காதலாகவே மட்டுமே எனக்கு ருசிப்பது
பிடிக்கும் என்பதினால் !

எழுதியவர் : முபா (28-Jul-17, 1:56 pm)
பார்வை : 159

மேலே