காதலை காதலாகவே மட்டுமே
ஒற்றை புன்னகை உதிர்ப்பாய்
அதுவும் என்னிடம் "கவிதையாகி "
போகிறது !
ஒற்றை பார்வை வீசுவாய்
அதுவும் என்னிடம் "கவிதையாகி "
போகிறது !
மௌனம் உடைத்து ஒரு சொல்தான்
பேசுவாய் அதுவும் என்னிடம் " கவிதையாகி "
போகிறது !
உன்னுள் இருக்கும் என்மேலான "காதலை "
மட்டும் நான் கவிதையாக்க முற்படுவதில்லை !
காதலை காதலாகவே மட்டுமே எனக்கு ருசிப்பது
பிடிக்கும் என்பதினால் !