அம்மா

அம்மா .. அம்மா ... அம்மா ...
உனக்குள் தொடங்கி
உன்னோடு தான்
என் உலகம்
சுழல்கிறது ... !

உந்தன் பெருமூச்சில்
என்னை தென்றல்
தொடுகிறது !

உன் பசிகளின்
இடிகளில் தான்
என் வானமே
பொழிகிறது !

என் ஆசைகளில்
உன் தேவைகள்
மறைகிறது !

என் தேடல்களில்
உன் முகவரி
தொலைகிறது !

உன் உறக்கமற்ற
இரவுகளில்
என் கனவுகள்
நடக்கிறது !

உன் உறுதியிலே
என் நாளை
பிறக்கிறது !

உன் சிறைக்குள் தான்
என் சுதந்திரம்
துளிர்க்கிறது !

உன் பாடுகளில்
என் பாடம்
விரிகிறது !

உன் கண்ணீர் கடலில்
என் வாழ்க்கை படகு
மிதக்குதே ..!

நான் வீசும்
வலையில்
மாட்டும் சிறுமீனாய்
ஒரு புன்னகை
தா ..... தாயே !

எழுதியவர் : அனுசுயா (7-Aug-17, 2:07 pm)
Tanglish : amma
பார்வை : 256

மேலே