அவள் கவிதைகளின் பிறப்பிடம் --- முஹம்மத் ஸர்பான்

உன் கண்கள்
கட்டளைகள்
தருகின்றது
என் இதயம்
கட்டுப்பட்டு
நடக்கின்றது

துரத்திப்
போகும்
காற்றில்
புன்னகை
அச்சுக்கள்
பூக்களின்
அரசாட்சி

கட்சிக் காரி
போல் நீயும்
எதிர்பாராத
வேளையில்
கவிதைக்கு
கண்ணீரை
தருகின்றாய்

ஓவியன் கூட
பூக்கள் முகம்
கேட்டால்
அவள் முகம்
காட்டி விட்டு
சாதனைகள்
புரிகின்றான்

மனம் எனும்
சாலையில்
காதல் எனும்
ஒரு பேருந்து
நித்தம் என்
மேல் மோதி
கவிதைகள்
தருகின்றது

கடல் அலை
உன் காலை
முத்தமிட்ட
மயக்கத்தில்
புகழ் பெற்ற
கவிஞனின்
புத்தகத்தை
திருடுகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Aug-17, 6:12 pm)
பார்வை : 562

மேலே